SDJF. Powered by Blogger.

Thursday, October 27, 2011

பெண்களை இலகுவில் ஏமாற்ற வழிசொல்லும் ஆண்கள்

பெண்களின் தனிமை, அவரகளின் பொருளாதார ரீதியான பலவீனம், அதிகாரமற்ற நிலை, பெண்கள் மீது ஆண்கள் சமயத்தின், பண்பாட்டின் பேரில் சமூகம் கொண்டுள்ள அழுத்தமான பார்வை என்பனவற்றைக் முன்னிறுத்தி இலகுவில் பெண்களை வன்முறைக்குற்படுத்தும் பழக்கமும் அவர்;களை விவாகரத்துச் செய்யும் பழக்கமும் இன்று ஆண்கள் மத்தியில் பெருகிக்கொண்டு வருகின்றது.

அண்மையில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் மேற்கொண்ட ஒர் ஆய்விலிருந்து இது தெரியவந்துள்ளது.
பொருளாதார வசதிகொண்ட ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து, மாமியின் அன்பினையும் மனைவியின் சுகயீனத்தையும் சாட்டாக வைத்து மாமியின் வீடு, நகைகள், காசு பொருட்கள் எல்லாவற்றையும் அபகரித்து விட்டு, இறுதியில் மனைவிக்கு சுகயீனம் என்ற காரணத்தைக் காட்டி விவாகரத்துப் பெற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம் இளைஞனின் சம்பவத்தை நோக்கலாம்.
கண்டி மாவட்டத்தில் 17 வயது பெண்பிள்ளைக்கு திருமணம் இடம்பெறுகின்றது.

ஆண் நினைத்தால் ரோட்டிலும் தலாக் செய்யலாம்?


நீங்கள் இருவருக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள் என அல்குர்ஆன் மனித சமூகத்திடம் வேண்டி நிற்கின்றது. குடும்ப விவகாரங்கள் மிக நேர்த்தியான முறையில் சமரசம் செய்யப்படுவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. உறவுகளை எளிதில் பிரித்து, சொந்தங்களைத் துண்டாடுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
பிட்டு, இடியாப்பம் மற்றும் வடை ஆகியவற்றைச் சுட்டு விற்று அன்றாடம் வாழ்க்கை நடத்தும் ஒர் பெண் திருகோணமலையில் வசித்து வருகின்றார்.

மரம் வெட்டும் தொழிலாளியான அப்பெண்ணின் கணவர் கன காலம் வரவும் இல்லை, கணவர் வேலைக்குப்போன இடத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். ஆனால் இந்தப் பெண்ணோ வயதுக்கு வந்த பெண்பிள்ளை படிக்கும் பையன் ஒருவனையும் வைத்துக் கொண்டு வருமானமும் போதாத நிலையில் கணவர் எந்தவித பராமரிப்புச் செலவும் வழங்காத நிலையில்  அப்பமும் இடியாப்பமும் விற்று காலத்தை ஓட்டி வருவதுடன் தன் கணவர் தனக்கு செலுத்த வேண்டிய பராமரிப்புச் செலவைக் கோரியே காதியாரிடம் சென்றுள்ளார்...

பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும் பலதார மணம்!


அணுசரனை வழங்கும் முஸ்லிம் தனியார் சட்டம்
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழும் நாடுகளில் இஸ்லாமிய ஷாஆ சட்டங்களின் கீழ் அவர்களுடைய குடும்ப உறவு விவகாரங்களை நெறிப்படுத்தும் விதத்திலான தனியான இஸ்லாமிய சட்டம் அமுலில் இருப்பதை நாம் யாவரும் அறிவோம்.  இலங்கையில் உள்ள இத்தகைய சட்டம் இலங்கை முஸ்லிம் தனியாட் சட்டம் எனப்படுகின்றது. 

இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டம் 18ஆம் நூற்றாண்டு தொடக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டது.  இப்போது நடைமுறையில் இருப்பது 1951ஆம் ஆண்டு 13ஆம் இலக்க விவாகஇ விவாகரத்துச் சட்டம்.  கடந்த 6 தசாப்தங்களாக இந்தச் சட்டத்தில் பொரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது மாறிவரும் சமூக ஒழுங்குக்கு ஏற்ப இந்தச் சட்டம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் நெகிழ்ச்சியை கொண்டிருக்கவில்லை என்பதே அர்த்தம்...

Site Under Construction....